வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2015 (19:50 IST)

நிலம் கையகபடுத்தும் சட்டம்: விவசாயிகளை அடமானம் வைத்துவிட்டார் ஜெயலலிதா - இளங்கோவன் சாடல்

சட்டத்தின் பிடியில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள தமிழக விவசாயிகளை ஜெயலலிதா அடமானம் வைத்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிலம் கையகபடுத்தும் சட்ட மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசுக்கும் அதை ஆதரித்த அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவித்தார். நிலம் கையகபடுத்தும் மசோதாவை எதிர்த்து வரும் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
 
ஈரோட்டில் பன்னாட்டு குளிர்பான நிறுவனம் அமைப்பதற்கு இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார். வேளாண் பொறியாளர் தற்கொலை விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நேர்மையாக நடைபெற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 
தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த இளங்கோவன் இதன் மூலம் மோடியின் இலங்கை பயணம் தோல்வி அடைந்துவிட்டதாக குறிப்பிட்டார்.