வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bharathi
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (07:50 IST)

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை: மின்னல் தாக்கியதில் 3 பேர் பலி

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் நேற்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.


 
 
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந் பழனிச்சாமி என்பவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மேய்த்த 8 ஆடுகளில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
 
விளாகம் கிராமத்தில் தையமுத்து என்ற பெண் இடிதாக்கி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணா மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சோலையாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.