திருக்குறளை அழி- அம்மா பெயரை எழுது: இது அதிமுக ஸ்டைல்
திருக்குறளை அழி- அம்மா பெயரை எழுது: இது அதிமுக ஸ்டைல்
பள்ளி சுற்றுச் சுவரில் எழுதியிருந்த திருக்குறளை அழித்துவிட்டு, அதமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரத்தை அதிமுகவினர் வரைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் அம்மாபாளையத்தில் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்று சுவரில் திருக்குறள் மற்றும் அன்னை தெரசா, டாக்டர் அப்துல்கலாம் போன்றவர்களின் பொன் மொழிகள் மற்றும் தத்துவங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், அந்த சுவரில் இருந்த அந்த பொன் மொழிகள் மற்றும் தத்துவங்கள் அழித்துவிட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாசகங்களை அதிமுகவினர் எழுதியதாக புகார் கூறப்படுகிறது.