1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 21 நவம்பர் 2015 (03:33 IST)

பாதியில் முடிந்த விவசாயிகள் கூட்டம்: ஆவேசமான கலெக்டர் மலர்விழி

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டருடன் விவசாயிகல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டம் பாதியில் முடிந்தது.
 

 
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது. அப்போது கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
 
இதனால், மாவட்ட கலெக்டர் மலர்விழி, ஒரு விவசாயியை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதற்கு மற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால், ஆவேசம் அடைந்த  சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை பாதியிலே ரத்து செய்தார். இதனால், விவசாயிகள் தாங்ளது குறையை யாரிடம் போய் சொல்லது என புலம்பினர்.