வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2016 (00:44 IST)

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது.
 

 
தமிழகத்தில், தைப்பூச திருவிழா பழனி முருகன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் போது, பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வதுதான்.
 
இந்த ஆண்டு தைப்பூச திருவிழா ஜனவரி 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் கொடிமரம் முன்பு கொடியேற்றினர். கொடி மரம் முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா பக்தி கோஷமிட்டனர்.