1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (08:49 IST)

திருப்பரங்குன்றம் அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை: வாலிபர் கைது

திருப்பரங்குன்றம் அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை: வாலிபர் கைது

திருப்பரங்குன்றம் அருகே உள்ள வாலகுருநாதன் அங்காள ஈஸ்வரி கோவிலின் பூசாரி நேற்று காலை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
52 வயதான நவநீத கிருஷ்ணன் என்ற பூசாரி தனது மகனுடன் நேற்று முன்தினம் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்தார். கோவில் வேலைகளை முடித்துவிட்டு இரவு அங்கேயே தங்கி விட்டார் பூசாரி நவநீத கிருஷ்ணன்.
 
காலையில் குளிப்பதற்காக கோவில் அருகே உள்ள கண்மாய் கரைக்கு சென்ற அவரை அங்குள்ள புதரில் மறைந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.
 
பலத்த காயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
 
தகவலறிந்து மோப்ப நாயுடன் வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பூசாரி நவநீதி கிருஷ்ணனுக்கும், அதே கோவில் உள்ள பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் கோவிலில் பூஜை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொலையாளிகள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த சதீஷ்குமார் என்ற 23 வயது வாலிபர் மேலூர் நீதிமன்றத்தில் சரணடைய வந்தார். அவரை காவல் துறையினர் காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மகா சிவராத்திரி நாளில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.