வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2016 (04:20 IST)

தமிழகத்தில் அரசியலில் மாற்றம் நிகழும்: வைகோ கணிப்பு

வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் நிகழும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திருச்சி மண்ணச்சநல்லூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து இருந்த காரணத்தினால் தான் 2011  ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.
 
ஆனால், தற்போதைய அதிமுக அரசில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல், கேள்வி கேட்வே முடியவில்லை. அப்படியே கேள்வி கேட்டால் பதில் இல்லை. போராட்டம் வெடித்தால் கைது. இந்த அதிமுக அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது.
 
எனவே, வரும் சட்ட மன்ற தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும். அதற்கான எழுச்சி தமிழகத்தில் மிகவும் பிரகாசமாக உள்ளது என்றார்.