தொடர்புடைய செய்திகள்
- அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் பிறப்பு: ஒரு பைசா செலவில்லாமல் குழந்தை பெற்ற பெண்..
- தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தேவையில்லாதது.. முதல் குடைச்சல் கொடுக்கும் விசிக...
- தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
- அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: 'தாய்மாமன் திட்டத்திற்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு...
- ரிப்பேர் பண்ணி கொடுங்க.. செலவு சமாளிக்க முடியல!.. புலம்பும் அம்மா உணவக ஊழியர்கள்!...
இனி அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ் அப் மூலம் ஓபி சீட்டு.. வரிசையில் நிற்க வேண்டாம்...
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சீட்டு பெறுவதற்காக பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இனி பொதுமக்கள் தங்களின் வீட்டிலிருந்தே வாட்ஸ்அப் செயலி மூலம் மிக எளிதாக ஓபி சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வசதிக்காக 'நலம் ஏஐ' என்ற பெயரில் புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்பும் நோயாளிகள் தங்களுக்கான ஓபி பதிவை முன்கூட்டியே செய்துகொள்ள முடியும்.
இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி, மருத்துவமனைகளில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலை குறைப்பதோடு, சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களின் நேரத்தையும் பெரும் சிரமத்தையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, ஏழை எளிய மக்களுக்கான மருத்துவ சேவைகளை இன்னும் எளிமையாக்க தமிழக அரசு எடுத்து வரும் இந்த நவீன முயற்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Edited by Siva
