வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2015 (00:17 IST)

நக்கீரன் கோபால் மீது ஜெயலலிதா மீண்டும் வழக்கு

தனது உடல்நிலை குறித்துத் தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி, நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

 
சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை நகர அரசு தலைமை வக்கீல் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:–
 
சென்னையில் இருந்து, வாரம் இருமுறை வெளியாகும் நக்கீரன் வார இதழில் கடந்த 15ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்டநிலை குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
 
அதில், ஜெயலலிதாவுக்கு டயாலசிஸ், கார்டன் ரிப்போர்ட் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தச் செய்தி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. உள்நோக்கத்துடன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
 
எனவே, இச்செய்தி வெளியிட்ட, நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 500 ம் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து செய்தி வெளியிட்ட ரெடிப் டாட் மீது தமிழக அரசு ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.