வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2016 (16:18 IST)

சுவாதி ஆவி அலைகிறதா? அதிர்ச்சியில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்

சுவாதி ஆவி அலைகிறதா? அதிர்ச்சியில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவி அலைவதாக வதந்தி பரவி வருகிறது.


 

 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவி அலைவதாக வதந்தி பரவி வருகிறது. ரயில் நிலையத்தின் அருகில் குடியிருப்பவர்களும் ஆவி அலைவதாக கூறி வருகின்றனர்.
 
அண்மையில் வடமாநில இளைஞர் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் ஆவி ஒன்றை பார்த்ததாக தகவல்கள் வெளியானது. இதை ஆராய்ந்து பார்க்க வாலிபர் ஒருவர், அதை சவாலாக எடுத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தனியாக சென்றுள்ளார்.
 
அப்போது பயணிகள் அமரும் இடத்தில் ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து கொண்டிருந்தாராம். அந்த வாலிபர் முன்னோக்கி செல்ல சிறிது நேரத்தில் அங்கிருந்த பெண்ணை காணவில்லை. இவர் பயந்து போய் வந்த வழியே திரும்ப சென்றுள்ளார். திடீரென்று அந்த பெண் சிரித்து கொண்டு அவர் முன்னே தோன்றியுள்ளது. 
 
அவ்வளவுதான் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட, அதை ஒருவர் பகிர்ந்துள்ளார். இவ்வாறு சுவாதி ஆவியாக அலைவதாக வதந்தி பரவி வருகிறது. இதனால் இரவு நேரத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் அதே நினைவுடன் சென்று பீதி அடைகின்றனர்.