வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 13 ஜூன் 2016 (17:03 IST)

சர்வேயர் கொலை வழக்கு : தற்கொலை செய்து கொள்ள போவதாக குற்றவாளி வாட்ஸ்-அப்பில் மிரட்டல்

ஒசூர் அருகே சர்வேயர் காரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசாரால் தேடப்படும் குற்றவாளி, தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம், சேலம் அருகே தீவட்டிபட்டி கே.என்.புதூர் அருகே, ஓசூர் நகராட்சி நில அளவையாலர் குவளைச்செழியன் காரில் வைத்து உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த இடத்தில் பதுங்கியிருந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.
 
விசாரனையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுவரை இந்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். ஆனால், முக்கிய குற்றவாளிகளான இக்ரமுல்லா மற்றும் கலைவாணர் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
 
தன்னுடைய கள்ளக்காதலிக்கு குவளை செழியன் பாலியல் தொல்லை கொடுத்ததால், இக்ரமுல்லா கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த அவர் ஏற்கனவே ஒரு வாட்ஸ்-அப்  வீடியோ வெளியிட்டிருந்தார்.
 
தற்போது மீண்டும் அவர் ஒரு வாட்ஸ்-வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “ என்னுடைய குடும்பம் என்னை விட்டு விட்டு சென்று விட்டது. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என்னுடைய தற்கொலைக்கு நானே காரணம்” என்று கூறியுள்ளார். 
இந்த வீடியோ எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். தலித் மாணவன் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்ட யுவராஜ் ஏற்கனவே பல வீடியோக்களை வெளியிட்டு போலீசாருக்கு குடைச்சல் கொடுத்தார். கடைசி வரை அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. அவராகவே சரண் அடைந்தார்.
 
இந்நிலையில், சர்வேயர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி இக்ரமுல்லா தற்போது வாட்ஸ்-அப்பில் வீடியோக்களை வெளியிட்டு வரும் விவகாரம் போலீசாருக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.