வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (04:29 IST)

அடாத மழையிலும் விடாமல் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

ஓசூர் அருகே அடாத மழையிலும் விடாமல் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  சர்வேயர் அக்பர் பாட்ஷாவை போலீசார் கைது செய்தனர்.
 
கர்நாடக மாநிலம், மாலூரை சேர்ந்த லட்சுமி தேவி(38) என்பவருக்கு சொந்தமான நிலம், ஓசூர் அருகே பலவனப்பள்ளி கிராமத்தில் உள்ளது.
 
இந்த நிலத்திற்கு பட்டா கோரி லட்சுமிதேவி, மனு அளித்தார். பட்டா வழங்க வேண்டும் எனில், ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அப்பகுதி சர்வேயர் அக்பர்பாஷா வற்புறுத்தியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க மணம் இல்லாத அந்த பெண்மணி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய பணம் ரூ.30 ஆயிரத்தை சர்வேயர் அக்பர்பா ஷாவிடம், லட்சுமி தேவி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த போலீசார் அக்பர் பாட்ஷாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.