1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sulur Minor Girl Murder Case: Accused Produced in Court on Stretchers with Plaster Casts, Remanded to 5-Day Police Custody

சூலூர் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு.. கைதான இருவரும் கை, கால்களில் மாவுக்கட்டு, நடக்க முடியாததால் ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்த போலீசார்

சூலூர்
கோவை மாவட்டம் சூலூரில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளிகளான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் இருவரையும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
 
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, கைதிகள் இருவருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. மேலும், அடையாளங்களை மறைப்பதற்காக அவர்களின் தலையில் மங்கி குல்லா அணிவிக்கப்பட்டிருந்தது. அவர்களால் சுயமாக நடக்க முடியாத சூழ்நிலை இருந்ததால், காவல்துறையினர் இருவரையும் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து நீதிமன்ற அறைக்குள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இந்த தற்காலிக காயம் மற்றும் ஸ்ட்ரெச்சர் காட்சி நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சிறுமி கொலை வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஐந்து நாள் போலீஸ் காவல் விசாரணையின் போது குற்றத்தின் பின்னணி மற்றும் கூடுதல் ஆதாரங்கள் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
About Writer
Webdunia