வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2015 (08:37 IST)

+2 மாணவர்கள் மடிக்கணினி பெற ஆதார் எண் அவசியம்: பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை

பிளஸ் 2 மாணவர்கள் மடிக்கணினி பெற ஆதார் எண் அவசியம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் ஆதார் எண் பெறப்படவேண்டும். 
 
பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் போது மாணவ-மாணவிகளிடம் அவர்களுடைய ஆதார் எண் பெற்று உரிய பதிவேட்டில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
 
பெறப்பட்ட ஆதார் எண் விவரத்தை மடிக்கணினி வழங்க ஏதுவாக எல்காட் ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும். அனைத்து மாவட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளின் ஆதார் எண் பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது குறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அனுப்புங்கள். இவ்வாறு கண்ணப்பன் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.