1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 30 டிசம்பர் 2015 (11:21 IST)

​பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 
 
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மணிவண்ணன் என்ற மாணவன், கடந்த ஜூன் மாதம் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரியலூர் காவல்நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டு அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர்.  
 
இது தொடர்பான வழக்கு அரியலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றம்சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.