சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆதரவு 30 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவா? 6 சீட் கட்சிகள் பயமுறுத்த முடியாதா?
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, அதிமுகவின் முக்கிய தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகர்வு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை பெரும்பாண்மையுடன் வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, எம்.ஆர்.சி நகரில் நடந்த சந்திப்பிற்கு பிறகு, இந்த ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த 30 எம்.எல்.ஏக்களின் பலம் தவெக அரசுக்கு கிடைத்துள்ளதால், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் மிரட்டல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெறும் 6 இடங்களை மட்டும் வைத்துக்கொண்டு அமைச்சரவை பங்கீடு அல்லது கொள்கை முடிவுகளில் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த கட்சிகளால், இனி முதல்வரை பயமுறுத்த முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. எண்கணித அடிப்படையில் தவெக அரசு இப்போது ஒரு நிலையான நிலையை எட்டியுள்ளது.
அதிமுகவின் இந்த ஆதரவு, தவெக அரசுக்குச் சட்டமன்றத்தில் மிகப்பெரிய கவசமாக மாறியுள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், முதலமைச்சர் விஜய் எவ்வித தயக்கமுமின்றி தனது மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். திராவிட அரசியலின் பெரும் தலைவர்கள் விஜய்யுடன் கைகோர்த்திருப்பது, தமிழகத்தில் ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்கியுள்ளது.
Edited by Siva
