தொடர்புடைய செய்திகள்
- வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
- இனிமேல் அரசியலே வேண்டாம்.. அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி...!
- மின்வெட்டு விவகாரம்: தவெக அரசை சாடி முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை!
- ஆவின் "கிரீன் மேஜிக்" பால் விநியோகம் நிறுத்தம் என்ற செய்தி உண்மையா? அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்!
- தரமுயர்ந்து ஸ்டைலாக மாறிய இலவச மிதிவண்டிகள்: தவெக அரசின் புதிய மைல்கல்!
எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு: சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
அடுத்த மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு தக்கல் முறையில் இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் படித்து தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வழக்கமான தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி, ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பித்திட இன்று ஒரு நாள் மட்டும் மீண்டும் இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விண்ணப்பதாரர்கள் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Edited by Siva
