1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (14:04 IST)

சாதி சான்றிதழ் இல்லாததால் வகுப்புக்குள் அனுமதி மறுப்பு : பள்ளி மாணவி தற்கொலை

சாதி சான்றிதழ் இல்லாததால் வகுப்புக்குள் அனுமதி மறுப்பு : பள்ளி மாணவி தற்கொலை

சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாத 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரிய குளத்தில் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேனி மாவட்டம், பெரிய குளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
 
சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், அந்த மாணவியை அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர்,  சில நாட்களாக வகுப்பறைக்கு வெளியிலேயே நிறுத்தியுள்ளார். 
 
இதனால் மனமுடைந்த அந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் அந்த பெண் மீட்கப்பட்டு, தற்போது பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.