வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 7 நவம்பர் 2015 (16:33 IST)

தீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.


 

 
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. இலங்கை கடற்படை கைது செய்வதும், தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், அதன் பின் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையான ஒன்றாகிவிட்டது.
 
தற்போது இலங்கை சிறையில் மொத்தம் 130 தமிழக மீனவர்கள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்நிலையில், தீபாவளி முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு தமிழக மீனவர்கள் 130 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 
 
விடுதலை செய்யப்படும் 130 மீனவர்களும் விரைவில் தமிழ்நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.