வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வியாழன், 16 ஜூலை 2015 (12:07 IST)

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில் வீசி தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே  மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில் வீசி தாக்கி இலங்கை  கடற்படையினர் விரட்டி அடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சுமார் 100 படகுகளில் 500 மீனவர்கள்  நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத் தீவு அருகே  மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள் என்று மிரட்டினர். பின்னர் அவர்கள் கற்கள்,பாட்டில்களை வீசி ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.