வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2015 (17:09 IST)

தீவிர கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தீவிர கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அடுத்தடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்றும் தமிழகம், புதுசேரி மற்றும் கடலோர ஆந்திர பிரதேசத்தில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன் அறிவிப்பு செய்துள்ளது.
 
இந்நிலையில், சென்னை சுற்றியுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி  உத்தரவிட்டுள்ளார்.
 
இதேபோல், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களலுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவித்துள்ளனர்
 
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.