வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 மார்ச் 2015 (15:29 IST)

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

+ 2 படித்துவந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஈரோடு மாவட்ட பவானிசாகர் புங்கார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் கூலி தொழிலாளியான இவருக்கு வயது 38.
 
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கடத்க்ச் சென்று 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இது குறித்து சத்தியமங்கலம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரமேசை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு மாணவியை கற்பழித்த குற்றத்துக்காக 1 ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று கூறினார்.
 
மேலும், மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் அபராதம் கட்ட தவறினால் 2 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
பாலியல் பலாத்காரம் குற்றத்துக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதில் அபராதம் கட்டாவிட்டால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.