வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2015 (05:32 IST)

அக்டோபர் 15-இளைஞர் எழுச்சி நாள்: ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

அக்டோபர் 15ஆம் நாளை இளைஞர் எழுச்சி நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இளைஞர்கள் வாழ்வில் எழுச்சியையும், நம்பிக்கையையும் ஊக்குவித்து இந்தியாவை வல்லரசு நிலைக்கு உயர்த்தக் கூடிய வல்லமை இளைஞர் சக்திக்கு மட்டுமே உண்டு என்று தனது வாழ்நாள் முழுதும் முழங்கியவர்  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
 
அவரது அற்புத எண்ணங்களும், வழிகாட்டுதல்களும் என்றென்றும் நினைவு கூர்ந்து போற்றப்பட வேண்டியவை ஆகும். அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது புகழும், பெருமையும் தலைமுறைகளைக் கடந்து நிலைத்து நிற்க வேண்டும் என்ற வகையிலும், அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் நாளை இளைஞர் எழுச்சி நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
இதே போல, அப்துல் கலாம் பிறந்த தினமான, அக்டோபர் 15ஆம் தேதியை இளைஞர் எழுச்சி தினமாக அறிவித்த, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.