1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2016 (04:36 IST)

ராதாபுரத்தில் வாக்குசேகரித்தார் சுப.உதயகுமார்

ராதாபுரத்தில் வாக்குசேகரித்தார் சுப.உதயகுமார்

பச்சைத் தமிழகம் கட்சியின் சார்பில் ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுப. உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


 

பச்சைத் தமிழகம் கட்சியின் சார்பில் ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுப. உதயகுமாரன் பாேட்டியிடுகிறார். இவர், தேர்தல் அறிக்கைக்கு பதிலாக வாக்காளர்களுக்கு தேர்தல் ஒப்பந்தத்தை கடநத சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
 
அப்போது, செய்தியாளர்களிடம் சுப.உதயகுமார் பேசுகையில், எனக்கு, தேமுதிக மற்றும் தலித் விரோத செயல்களை முன்னிலைப்படுத்தும் பாமகவின் ஆதரவு தேவையில்லை. மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ, தொல். திருமாவளவன் ஆகியோர் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அவர்களது ஆதரவை மட்டும் ஏற்பேன்.
 
முதல் கட்டமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம். கூடங்குளம் எதிர்ப்பு குறித்த எங்களது குரலை தமிழக சட்டப் பேரவையில் நாங்களே எழுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார். இந்த நிலையில், ராதாபுரம் தொகுதியில் சுப.உதயகுமார் மக்களை நேரில் சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
 
திமுக மற்றும் அதிமுகவுக்கு கடும் போட்டியை சுப.உதயகுமார் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.