1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2016 (08:36 IST)

லாரி – வேன் மோதல்: உசிலம்பட்டி அருகே 4 பேர் உயிரிழப்பு

லாரி – வேன் மோதல்: உசிலம்பட்டி அருகே 4 பேர் உயிரிழப்பு

மாடுகளை ஏற்றி வந்த லாரியும், பூ ஏற்றி வந்த வேனும் உசிலம்பட்டி அருகே மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


 

 
தேனியில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பூக்களை ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு மதுரை பூ மார்க்கெட் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
 
இந்த வேன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது.
 
இந்த விபத்தில், பூ ஏற்றி வந்த வேன் சாலையில் சாய்ந்து உருண்டது. இதனால், வேனில் வந்த பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இருளாண்டி, செல்வராஜ், பழனிமுத்தன், வேல்முருகன், ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், இதே வேனில் வந்த பி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தபஞ்சன், சீனிமுத்து, கர்ண மகாராஜன், மாயி என்ற மாடசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
 
காயமடைந்தவர்கள் அனைவரையும் உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
இதைத் தொடர்ந்து, மாயி என்ற மாடசாமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.