வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 9 ஜூலை 2016 (16:09 IST)

இந்திய ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
 

 
ராணுவத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு உரிய நபர்களைத் தேர்வு செய்யும் வகையில், இந்த முகாம் நடைபெறுகிறது.
 
இந்த முகாமில், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
 
மேலும், முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள்,  தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளதில் பதிவு செய்து கொள்ளலாம்.