வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:25 IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், விசாரணை ஆணையத்திலிருந்து கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த ஆணையத்தின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்களை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.