1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rajinikanth talk in art of living show

இங்க என்னை யாருமே கண்டுக்கல!.. ஆஸ்ரமத்தில் ஜாலியாக பேசிய ரஜினி!...

rajini
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இப்போதும் அவரிடம்தான் அந்த சூப்பர் சார் பட்டம் இருக்கிறது.. 70 வயதை கடந்தாலும் இன்னமும் ஆக்டிவாக அதுவும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் அடுத்து கமலுடன் இணைந்தும் அவர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற Art of Living நிகழ்ச்சியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் தன் பெற்ற அனுபவத்தை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

ஒருமுறை ஒரு ஆசிரமத்திற்கு சென்ற போது மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்த்தேன்.. ஆனால் ஒருவர் கூட என்னை கண்டு கொள்ளவில்லை.. சினிமா புகழை விட ஆன்மீகத்தின் சக்தியை மேலானது என்பதை நான் அந்த உணர்ந்தேன்’ என ரஜினி பேசியிருக்கிறார். ரஜினி பேசிய அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
போயஸ்கார்டனுக்கு குடியேறுகிறாரா விஜய்?.. இதுதான் காரணமா?..