1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (12:35 IST)

ராஜ் தாக்கரே கன்னத்தில் அறைந்தால் ரூ.2 லட்சம் பரிசு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

ராஜ் தாக்கரேவின் கன்னத்தில் அறைந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.


 

 
பிரபல நடிகர் அமீர் கான், நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாக கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றது.
 
இந்நிலையில், அமீர் கானின் கருத்துக்கு எத்ர்ப்பு தெரிவித்து, அமீர் கானின் கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிவ சேனா அறிவித்திருந்தது.
 
இதைத் தொடர்ந்து, சிவ சேனாவின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவ சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை கன்னத்தில் அறைந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப் போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
 
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணை பொதுச் செயலாளர் தவ்பீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
அமீர் கானை அறைபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்று சிவ சேனா அறிவித்துள்ளது. வன்முறையைத் தூண்டும் சிவ சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை பொது இடத்தில் கன்னத்தில் அறைபவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இரண்டு லட்சம் ரூபாய் பரிசளிக்கத்தயார்.
 
இது போன்ற மிரட்டல் அரசியலுக்கு, முஸ்லிம் சமுதாயம் இனி அஞ்சாது. எல்லா வகையிலும் மதவெறியர்களை எதிர்கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தயங்காது என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளார்.