வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2015 (18:04 IST)

சென்னையில் இருந்து செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.


 
சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.20 மணிக்கு காக்கிநாடா செல்லும் காக்கிநாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது.
 
இதேபோல் மாலை 5.40 க்கு புறப்பட வேண்டிய சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், மாலை 4.25 க்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்-பூரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
 
இந்நிலையில், யஷ்வந்த்பூர்-பாடலிபுத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்ட்ரல்-ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், நவஜீவன் எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தண்டவாளத்தில் நீர் தேங்கி நிற்பதால், சென்னை புறநகர் ரயில்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதால், பயணிகள் பெரும் துன்பத்திற்க உள்ளாகியுள்ளர்.