வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2015 (10:07 IST)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
 
இந்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பின. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
 
இந்நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபும் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் 22 ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.