செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2016 (12:07 IST)

காணும் பொங்கல்: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 

 
சென்னை மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையும், தற்காலிக காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 
 
அங்கு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 
இதேபோல, பெசன்ட் நகர் கடற்கரையிலும் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
பூங்காக்கள், பொருட்காட்சி மையம், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பிற இடங்களிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.