வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 2 மே 2015 (16:38 IST)

சாப்பிட குழம்பு தர மறுத்த ஹோட்டல் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

பிரபல ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும் போது, குழம்பு தாராமல் மறுத்த ஹோட்டல்  நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சாந்தகுமார் (வயது 25), இவர் நேற்று (மே 1 ஆம் தேதி) மாலை  சென்னை எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், தனக்கு மிகவும் பிடித்த மும்பை உணவு வகைகளை ஆர்டர் செய்துள்ளார்.

இதற்காக, ஒரு கப் தயிர் சாதம், இரண்டு ரொட்டி, ஒரு கப் வெள்ளை சாதம், ஒரு கப் பருப்பு குழம்பு ஆகியவற்றை  அவருக்கு, ஹோட்டல் சப்ளையர்கள் கொடுத்துள்ளனர்.

அதை அவர் ருசி பார்த்த நிலையில், கூடுதலாக, ஒரு கப் பருப்பு குழம்பு தருமாறு ஹோட்டல் ஊழியரிடம் சாந்தகுமார் கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டல் ஊழியர் மறுத்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால்,
சாப்பிடுவதை பாதியிலே நிறுத்திய சாந்தகுமார், அருகில் உள்ள எழும்பூர் காவல் நிலையத்தில் ஹோட்டல் நிர்வாகம் மீது புகார் அளித்தார்.

சற்று அதிர்ச்சி தந்தாலும், சாந்தகுமார் புகாரை பெற்றுக் கொண்டு, புகார் ஏற்பு மனு ரசீது கொடுத்துள்ளனர். மேலும், இந்த சாப்பாட்டு விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.