1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:13 IST)

பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டதால் அவதிப்படும் மக்கள்!

காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களும் தாக்கப்பட்டனர். அவர்களின் உடைமைகளும் அடித்து நெருக்கப்பட்டன.


 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்-புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள 4 ஆயிரத்து 800 பெட்ரோல்-டீசல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனால், அலுவலகம் செல்லுவோர் வாகனத்தில் பெட்டோ-டீச்ல் இல்லாததால், பேருந்து மூலமும், ரயில் மூலமும் அலுவலகம் சென்றுள்ளனர். சிலர் அலுவலகத்திற்கு செல்லாமல் விடுமுறை எடுத்துக்கொண்டனர்.