1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 22 நவம்பர் 2015 (19:13 IST)

சென்னையில் தொடர் மழையால் பழமையான வீடு இடிந்து விபத்து: இளைஞர் பலி

சென்னையில் தொடர் கனமழையால், ஓட்டேரி பகுதியில் பாதி இடிக்கப்பட்ட நிலையில் பழமையான கட்டடம் இடிந்து விழந்தது. இதில் இந்த வீட்டின் சுவர் அருகில் இருந்த வீடு மீது ‌விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.


 
 
சென்னை ஓட்டேரி அருகே பரசுராமன் கோவில் தெருவில் உள்ள பழமையான ஒரு வீட்டை இடிக்க, அண்டைவீ்ட்டார் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றதால், அந்த வீட்டை இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் இன்று அந்த பழமையான வீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த வீடு மீது விழுந்ததுள்ளது இதில், அருகில் வீட்டின் உள்ளே இருந்த ராஜ் என்ற இளை‌ஞர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் அந்த வீட்டில் இருந்த இவரது தாய்
 
படுகாயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.