1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (23:19 IST)

ஒலிம்பிக்: தமிழக வீரர் 4-வது இடம்

ஒலிம்பிக்: தமிழக வீரர் 4-வது இடம்

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்.


 
ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அவர், இன்று நடைபெற்ற 77 கிலோ கிலோ எடைப்பிரிவினருக்கான குரூப்-பி இறுதிச்சுற்றில் களமிறங்கினார். இதில் ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 181 கிலோவும் என மொத்தம் 329 கிலோ எடையைத் தூக்கி 4-வது இடத்தை பிடித்தார். 

கொலம்பிய வீரர் ஆண்ட்ரஸ் மயுரிசியோ 346 கிலோ எடையை தூக்கி முதலிடத்தையும், ஸ்பெயின் வீரர் ஆண்ட்ரஸ் எட்வர்டோ 343 கிலோ தூக்கி 2-வது இடத்தையும், ஜெர்மனியின் முல்லர் நிகோ 332 கிலோ எடை தூக்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.