தொடர்புடைய செய்திகள்
- நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் மே 10 ஆம் தேதி பதவியேற்பு விழா நடந்திருக்காது: பெ சண்முகம்
- செங்கல்பட்டு கணவன், மனைவி என்று பேசும் உதயநிதிக்கு.. பால்டாயில் கதையை பேசினால் நாறிடும்.. சமூக வலைத்தள பயனாளி
- திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை: பெ சண்முகம்...
- சபாநாயகர் நான்தான். எத்தனை முறை வேண்டுமானாலும் தேசிய கீதத்தை ஒலிக்க வைப்பேன்! ஜேசிடி பிரபாகர்
- தவெக ஒருவேளை 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் இதுதான் நடக்கும்: தங்கம் தென்னரசு சவால்
3 மாதத்தில் தவெக அரசு கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் சொன்னதுக்கு அர்த்தம் இப்போது புரிகிறது: பெ சண்முகம்
தமிழகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, தாங்கள் மீண்டும் அரியணையில் அமர வேண்டும் என்ற நோக்கில் தான் திமுக இத்தகைய குறுக்குவழிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், "சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும், மாற்றம் வரும் என்று பேசியதன் நிஜமான பின்னணி என்னவென்று இப்போதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது" என்று சண்முகம் சாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து கட்சி மாறுவது தமிழ்நாட்டில் சகஜமான ஒன்றுதான் என்றாலும், கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து ஒரு மக்கள் பிரதிநிதியை விலை பேசும் இந்த அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
Edited by Siva
