ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
திருப்பூரை சேர்ந்த இளம் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அவரது தந்தை அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என கருத்து தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.
ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தாலும், அதில் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என அண்ணாதுரை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் உரிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இருப்பினும், வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு, ரிதன்யாவின் குடும்பத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran