வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (05:27 IST)

தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

 
நமக்கு நாமே பயணத்தின் தொடர்ச்சியாக சென்னை வேளச்சேரியில் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 
 
கடந்த 2004 ஆம் வருட சுனாமி பேரலையின் போதும், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய சேவையை மனதார பாராட்டினார்.
 
மேலும், நிலைகுலைந்து நின்ற மக்களின் வாழ்க்கை மேம்பட பல்வேறு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் அயராது பாடுபட்டதை சுட்டிக்காட்டி பாராட்டினார்.
 
திமுக அரசு அமைந்தவுடன் மக்கள் பணியில் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றார்.