வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 1 ஜனவரி 2015 (08:10 IST)

தமிழரின் பிரச்சனைகளைக் களையும் ஆண்டாக 2015 அமையட்டும்: கருணாநிதி வாழ்த்து

தமிழர் முன்னேற்றத்துக்கு எதிரான 2014ஆம் ஆண்டு போன்று அல்லாமல் தமிழரின் பிரச்சனைகளைக் களையும் ஆண்டாக 2015 அமையட்டும் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
உலக நிகழ்வுகளை வருங்காலத் தலைமுறைகளுக்குக் காலமுறைப்படி நினைவூட்டிடும் வரலாற்றிற்கு அச்சாணியாக இயேசு நாதரின் பிறப்பினை மையமாக வைத்துக் கணக்கிடப்படும் ஆங்கில ஆண்டு நிரலில் 2014 விடைபெற, புத்தாண்டு 2015 பிறக்கிறது.
 
2014 மறைந்திட, புதுமை விளையுமா? எனக் காத்துள்ள மக்களை நாடி வருகிறது 2015!
 
2014ஆம் ஆண்டு தமிழகத்திற்கு - தமிழக நலனுக்கு - தமிழர் முன்னேற்றத்திற்கு எதிராகவே தாங்க முடியாக் கேடுகளைப் பதிவு செய்து அரங்கேற்றிவிட்டு நகர்கிறது.
 
அவை அனைத்தையும் களையும் விதமாக இந்தப் புத்தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்." இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.