புதிய இயக்கம் உதயமாகிறது என்று அறிவித்தார் ஜி.கே. வாசன்: பெயரும் சின்னமும் விரைவில் அறிவிக்கப்படும்
புதிய இயக்கம் உதயமாகிறது என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் ஜி.கே. வாசன் அதன் பெயரும் சின்னமும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
‘பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் காமராஜர் ஆகியோரின் வழியில் பணியாற்றுவோம். சிறுபான்மையினர், பெண்கள் முதலிய அனைவரின் நலனுக்காகப் பாடுபடுவோம்.‘ என்று கூறினார்.
‘இந்த அறிவிப்பின் மாநாடு நடைபெற உள்ளது‘. ‘மாநாட்டின் தேதி விரைவில் அறிவிக்கப்படும். மாநாடு திருச்சியில் நடைபெறும்‘ என்று வாசன் அறிவித்தார்.