வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (13:45 IST)

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் மே 14ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேலும் இது புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.