1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 நவம்பர் 2025 (11:00 IST)

நான் இந்தியாவுக்கு வந்ததே இல்லை: ராகுல் காந்தி கூறிய பிரேசில் மாடல் விளக்கம்..!

நான் இந்தியாவுக்கு வந்ததே இல்லை: ராகுல் காந்தி கூறிய பிரேசில் மாடல் விளக்கம்..!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஹரியானா வாக்காளர் பட்டியலில் ஒரு பிரேசில் மாடலின் புகைப்படம் 22 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, 2024 சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டது என்று குற்றம் சாட்டினார். மொத்தம் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் பாஜகவும் உடந்தையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதற்கு பதிலளித்த பிரேசிலை சேர்ந்த அந்த பெண் 'லரிசா', தான் பயன்படுத்தியது ஒரு பழைய 'ஸ்டாக் ஃபோட்டோ' என்றும், தனக்கும் இந்திய அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். தான் இந்தியாவுக்கு வந்ததே இல்லை என்றும், தற்போது தான் ஒரு சிகையலங்கார நிபுணர் மற்றும் டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர் என்றும் அவர் விளக்கினார்.
 
தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் புகார்களை நிராகரித்ததுடன், வாக்காளர் பட்டியல் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் தெரிவித்தது. பாஜகவும் இந்த குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றவை' என்று கடுமையாக விமர்சித்துள்ளது
 
Edited by Siva