வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 30 மார்ச் 2016 (04:53 IST)

கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 

 
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று காலை 8.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. 
 
கடந்த 25ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. 
 
அஷ்டபந்தன பூஜை நடைபெற்று, பின்பு சன்னதிகளில் உள்ள மூலவருக்கு அஷ்டபந்தனம் மற்றும் ஸ்வர்ண பந்தனம் சாற்றுதலும் இன்று முதல் நடைபெறுகிறது. 
 
இன்று பாலாலயம் நிறுவப்பட்டு, அனைத்து சன்னதிகளின் கருவறைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.