பணமா? ஜனமா? தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்.. என் ஜனம் தான் டா எனக்கு முக்கியம்.. ஆவேசமாக பேசிய முதலமைச்சர் விஜய்
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆவேசமாகப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "பணமா ஜனமா? என்று கேட்டால், ஜனm தான் எனக்கு முக்கியம் என்று கெத்தாகச் சொல்வேன்" என்று அவர் முழங்கினார். கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் போது, தாம் மிகவும் சோகமாக இருந்ததையும், அந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் தம்மீது பொய்யான பழிகளைச் சுமத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமக்குக் காசு, பணத்தை விட மக்களின் நலனே முக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்திய விஜய், எதிர்க்கட்சியினருக்குத் தம்மைக் கேள்வி கேட்கும் துணிச்சல் இல்லை என்று விமர்சித்தார்.
தம்முடைய அரசு மீது பல்வேறு குறைகளைச் சொல்லி வரும் எதிர்க்கட்சியினரைப் பார்த்து, அவர்களால் தம்மைப் போல வெளிப்படையாகப் பேச முடியாது என்றும் அவர் சவால் விடுத்தார். "அவர்கள் டிசைன் டிசைனாகக் குறைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கட்டும், அவர்கள் அதையே சொல்லிக் கொண்டு போகட்டும், நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பேன்" என்று அவர் உறுதியுடன் பேசினார்.
மக்களின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட இந்த ஆட்சியைச் சிதைக்க நடக்கும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் நலனே முக்கியம் என்ற பாதையில் தனது பயணம் தொடரும் என்பதை முதலமைச்சர் விஜய் தனது ஆவேசமான பேச்சு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
Edited by Siva
