1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (09:47 IST)

அரசு மரியாதையுடன் கி.ரா உடல் நல்லடக்கம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளரான கி.ரா காலமான நிலையில் அவருக்கு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் இலக்கிய சூழலில் பல நெடுகாலமாக பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்ட பல படைப்புகளை கொடுத்தவர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளரான கி.ரா தனது 99 வயதில் உடல்நல குறைவால் காலமானார்.

அவரது இழப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என தெரிவித்துள்ளார்.