வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2015 (07:50 IST)

சட்டமன்றத்தில் பேச முடியாததால், மக்கள் மன்றத்தில் பேச வந்துள்ளேன்: மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத்தில் பேச முடியாததால், உங்களைத் தேடி, மக்கள் மன்றத்தில் பேச வந்துள்ளேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது இது குறித்து ஸ்டாலின் பேசுகையில், "சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில், எனது "பேஸ்புக்" கணக்கில் வெளியிடும் கருத்துகள் என்னுடையது அல்ல என்றும், அந்த கருத்துகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது போல கூறியிருக்கிறார்.
 
ஜெயலலிதா சட்டசபையில் அறிவிக்கும் அறிவிப்புகளை எல்லாம், அவராகவே எழுதி கொண்டு வந்தாரா? அல்லது, வேறு நபர்கள் எழுதியதை வாசித்தாரா? என்பதற்கு பதில் அளிக்க வேண்டும். 
 
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான எங்களை பேச விடுவது கிடையாது. சட்டமன்றத்தில் பேச முடியாததால், உங்களைத் தேடி, மக்கள் மன்றத்தில் பேச வந்துள்ளேன்." என்று கூறினார்.