வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (23:47 IST)

பார்வையை இழந்த தனுஷ்: ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

பார்வையை இழந்த தனுஷ்: ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

செல்போனை சார்ஜில் போட்டு பேசியதால் பார்வையை இழந்த சிறுவன் தனுஷ்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
 

 
சென்னை, மதுராந்தகம் செய்யூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பனின் 3ஆவது மகன் தனுஷ்  (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, செல் போன் சார்ஜர் போட்ட நிலையில், தனுஷ் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, திடீரென செல்போன் வெடித்து, சிறுவனின் வலது கை மற்றும் 2 கண்களில் படுகாயம் ஏற்பட்டது.
 
சிறுவனுக்கு சிகிச்சைக்காக முதலில் செங்கல்பட்டு மருத்துவமனைக்கும், பின்பு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, தனுஷ் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்த சிறுவனனை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலன் விசாரித்து ஆறுதல் கூறினார்.
 
மேலும், செல்போனை சார்ஜ் செய்து கொண்டு பொது மக்கள் யாரும் பேச வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.