தொடர்புடைய செய்திகள்
- விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் காங்கிரஸ் ஆதரவு தருமா? பரபரப்பு தகவல்..!
- தொங்கு சட்டசபையை நோக்கி நகரும் தமிழகம்.. தவெக ஆட்சி அமைக்க யார் யார் ஆதரவு கொடுப்பார்கள்?
- 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால் ஒரு தொகுதியின் தேர்தல் செலவை ஏற்க வேண்டுமா? சென்னை ஐகோர்ட்
- மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..
- தென்காசி: ஆலங்குளம் தொகுதியில் இரவு 9 மணி வரை நீடித்த வாக்குப்பதிவு
தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்திருந்தால் 30-40 எம்.எல்.ஏ கிடைச்சிருக்கும்.. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை செய்த வேலை..
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ள அசுரத்தனமான வாக்கு சதவீதம், திமுகவின் வெற்றி வாய்ப்புகளை பல இடங்களில் பறித்துள்ளது. இந்த சூழலில், "ஒருவேளை தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால், திமுக படுதோல்வியை சந்தித்திருக்கும், அதுமட்டுமின்றி காங்கிரஸ் 50 தொகுதிகளை பெற்றிருந்தால் அதில் 30-40 எம்.எல்.ஏக்கள் ஜெயித்திருப்பார்கள் என்ற விவாதம் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் எடுத்த முடிவுகளே திமுகவை காப்பாற்றியுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது விஜய்யின் புதிய அலைக்கு ஆதரவு தருவதா என்ற ஊசலாட்டத்தில் இருந்தது. ஆனால், தவெக-வின் எழுச்சியை முன்கூட்டியே கணித்து அதனுடன் கைகோர்க்க காங்கிரஸ் தவறிவிட்டதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸின் வாக்கு வங்கியும், விஜய்யின் 38 சதவீத வாக்குகளும் இணைந்திருந்தால், திமுக தமிழகம் முழுவதும் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை காங்கிரஸ் இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால், இன்று கோட்டையில் ஆட்சி மாற்றம் இன்னும் பிரம்மாண்டமாக நிகழ்ந்திருக்கும்.
ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகையின் முடிவு திமுகவிற்குச் சாதகமாக அமைந்தாலும், காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய வாய்ப்பைத் நழுவ விட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
