தொடர்புடைய செய்திகள்
- தவெக அரசுக்கு எதிராக அதிமுக, திமுக இணைந்து போராட்டம்.. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பு...!
- பதிவுத்துறை வரலாற்றில் புதிய மைல்கல்: 215 சார்பதிவாளர்களுக்கு வெளிப்படையான பணியிட மாறுதல்!
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...
- 3 மாதத்தில் தவெக அரசு கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் சொன்னதுக்கு அர்த்தம் இப்போது புரிகிறது: பெ சண்முகம்
- 15 தவெக எம்.எல்.ஏக்களை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வைக்க முயற்சி.. முறியடித்த உளவுத்துறை...
திமுக அவதூறு பரப்பினால் கடும் பதிலடி கொடுப்போம்: அமைச்சர் வன்னியரசு
தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ள நிலையில், திமுக தொடர்ந்து விசிக மீது அவதூறு பரப்புவதாகத் தவெக அரசின் தற்போதைய அமைச்சரான வன்னிய அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். திமுக அவதூறு பரப்பினால் அதற்குரிய பதிலடியை தவெக-விசிக கூட்டணி அரசு கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கவும், அமைச்சரவையில் இணையுமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டும்தான் தான் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதாக வன்னிய அரசு தெளிவுபடுத்தியுள்ளார். தங்களை திமுக ஏமாற்றிவிட்டதாகவோ அல்லது தாங்கள் திமுகவிற்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவோ பரப்பப்படும் வதந்திகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மேலும், திமுகவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது எப்போதுமே மதிப்பு உண்டு, ஆனால் அதே நேரத்தில் தங்களுக்கு யாரும் அரசியல் ஆலோசனை சொல்லத் தேவையில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, திமுகவின் ஆ.ராசா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்றும், தங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்றும் வன்னிய அரசு கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் திமுக மற்றும் தவெக-விசிக கூட்டணிக்கு இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
